ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

பார்வையற்றோருக்கான நோட்டுகள் தற்போது சாத்தியமில்லை: ஆர்பிஐ

பார்வையற்றவர்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் புதிய நோட்டுகளை தற்போது அச்சிடுவது சாத்தியமில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

News image

ரிசர்வ் வங்கி

Updated On :20 ஜூலை 2023, 12:39 pm IST

மும்பை: பார்வையற்றவர்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் புதிய நோட்டுகளை தற்போது அச்சிடுவது சாத்தியமில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய அரசால் சில ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட புதிய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை பார்வையற்றவர்கள் கண்டறிவதில் சிரமம் இருப்பதால் புதிதாக நோட்டுகள் அச்சிட வேண்டும் என்று தேசிய பார்வையற்றோர் சங்கம் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கில் ரிசர்வ் வங்கி தரப்பில் மும்பை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வின் முன்பு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், “கவனமாக பரிசீலிக்கப்பட்ட பிறகுதான் புதிய நோட்டுக்ளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது பல மதிப்பிலான நோட்டுகள் வெவ்வேறு அளவுகளில் அச்சிடப்பட்டு வருகின்றது. புதிதாக நோட்டுகள் வந்தால் பிரச்னையை தீர்ப்பதற்கு பதிலாக குழப்பத்தை உண்டாக்கும்.

2022-2023-ஆம் ஆண்டில், பழைய மற்றும் கிழிந்த நோட்டுகளை மீண்டும் பாதுகாப்பு அம்சங்களுடன் அச்சிடுவதற்கு மட்டும் ரூ.4,682.80 கோடி வருடாந்திர செலவாக உள்ளது.

புதிய நோட்டுகளை அறிமுகப்படுத்தினால் தற்போதைய செலவைவிட அதிகமானதாகவும், அதிக நேரத்தை எடுக்கும்.” என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், மீண்டும் புதிய நோட்டுகள் அச்சிடும்போது பார்வையற்றவர்களுக்காக தேசிய அளவில் இயங்கக்கூடிய அமைப்புகளின் ஆலோசனையை பெறுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கியின் பிரமாணப் பத்திரத்துக்கு தேசிய பார்வையற்றோர் சங்கம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் மாதத்துக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.