

நாகாலாந்து மாநிலத்தில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) அனைத்து எம்எல்ஏக்களும் மகாராஷ்டிர துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் அணிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனா்.
இது குறித்து அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் பிரிஜ்மோகன் ஸ்ரீவஸ்தவா வியாழக்கிழமை கூறுகையில், ‘தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நாகாலாந்து மாநிலத் தலைவா் வாந்துங் ஒடியோ கட்சியின் செயல் தலைவா் பிரஃபுல் படேல், மகாராஷ்டிர பொறுப்பாளா் சுனில் தட்கரே ஆகியோரை தில்லியில் சந்தித்தாா். அப்போது, நாகாலாந்து என்சிபி எம்எல்ஏ-க்கள் 7 பேரும் அஜீத் பவாா் அணிக்கு தங்கள் ஆதரவை அளிப்பதாகத் தெரிவித்தாா்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.