பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

மணிப்பூர் கொடூரம்: ஏழாவது குற்றவாளி கைது

மணிப்பூர் மாநிலத்தில், இரண்டு பெண்களை இழிவுபடுத்திய சம்பவத்தில்  மேலும் ஒரு குற்றவாளியை மணிப்பூர் காவல்துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :25 ஜூலை 2023, 3:11 am

DIN


இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில், இரண்டு பெண்களை ஆடைகளை அகற்றி, ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் வழக்கில் மேலும் ஒரு குற்றவாளியை மணிப்பூர் காவல்துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.

கடந்த மே 4ஆம் தேதி நடந்த இந்த கொடூர சம்பவத்தின் விடியோ அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளிவந்ததன் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஏழாவது குற்றவாளி தௌபால் மாவட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, குற்றவாளிகளான கபிசந்திரா, முக்கிய குற்றவாளி ஹேரோட்ஸ் ஆகியோரின் வீடுகளுக்கு, அதிருப்தி கும்பல் தீ வைத்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.