ஆக.4ல் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களுடன் கார்கே ஆலோசனை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆக.4ல் ஆலோசனை நடத்த உள்ளார். 
ஆக.4ல் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களுடன் கார்கே ஆலோசனை
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆக.4ல் ஆலோசனை நடத்த உள்ளார். 

2024 மக்களவைத் தேர்தல், தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் காங்கிரஸ் கட்சி ஆலோசனையை தொடங்குகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் 4ஆம் தேதி தில்லியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். 

இதில் பங்கேற்க, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மாநில முன்னாள் தலைவர்கள், 8 எம்.பி.க்கள், 18 எம்எல்ஏ-க்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக 4 ஆண்டுகளுக்கு மேல் கே.எஸ்.அழகிரி தொடர்கிறார். 

எனவே கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு புதிய தலைவர் நியமிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இதேபோல் ஆகஸ்ட் 2ல் கேரளம், 3ல் கர்நாடகம் காங்கிரஸ் தலைவர்களும் தில்லி சென்று ஆலோசனையில் பங்கேற்க உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com