தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

ஒடிசா ரயில் விபத்து குறித்து பிரதமரிடமும், ரயில்வே அமைச்சரிடமும் கேட்க நிறைய கேள்விகள் உள்ளன: காங்கிரஸ்

ஒடிசா  ரயில் விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடமும், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடமும் நிறைய கேள்விகள் கேட்க உள்ளதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :3 ஜூன் 2023, 4:28 pm IST

ஒடிசா  ரயில் விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடமும், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடமும் நிறைய கேள்விகள் கேட்க உள்ளதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் விபத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்பது மற்றும் மற்றும் அவர்களுக்கு நிவாரணம் வழங்குவது போன்ற உடனடி பணிகளுக்குப் பின்பு இந்த கேள்விகள் கேட்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒடிசாவில் ஏற்பட்ட மிக மோசமான ரயில் விபத்துகளில் இதுவும் ஒன்று. இந்த தருணத்தில் விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் காங்கிரஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் செய்யுமாறு அறிவுருத்தப்பட்டுள்ளனர். காங்கிரஸைச் சேர்ந்த தலைவர்கள் பலரும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஒடிசா விரைந்துள்ளனர். மேலும், பலரும் ஒடிசாவுக்கு செல்ல உள்ளனர். இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். பிரதமர் நரேந்திர மோடியிடமும், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடமும் கேட்பதற்கு எங்களிடம் நிறைய கேள்விகள் உள்ளன. விபத்தில் சிக்கியவர்களை மீட்பதே உடனடி கடமையாகும் எனக் கூறப்பட்டுள்ளது. 

ஒடிசாவின் பாலசோரில் ஏற்பட்ட இந்த கோர விபத்தில் இதுவரை குறைந்தது 261 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கிட்டத்தட்ட 1000 பேர் காயமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.