பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

ஆப்பிரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள இந்தியா தயாராக உள்ளது: பியூஸ் கோயல்

ஆப்பிரிக்காவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டு இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான பொருளாதார உறவுகளை வலுப்படுத்த இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 12:35 am IST

ஆப்பிரிக்காவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டு இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான பொருளாதார உறவுகளை வலுப்படுத்த இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது.

ஆப்பிரிக்காவின் 15 நாடுகளைச் சேர்ந்த தூதர்களை சந்தித்துப் பேசிய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் இதனை தெரிவித்தார். 

அப்போது அவர் பேசியதாவது: ஆப்பிரிக்கா நாடுகளுடன் தனித் தனியாகவோ அல்லது ஒட்டுமொத்தமாக ஆப்பிரிக்காவுடனோ தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை மேற்கொள்ள இந்தியா தயாராக உள்ளது. ஆப்பிரிக்காவின் வர்த்தகம், முதலீடு போன்றவற்றில் இந்தியா நம்பிக்கை வாய்ந்த நாடாக திகழும் என்றார். 

மத்திய அமைச்சர் உடனான இந்த சந்திப்பில் அல்ஜீரியா, எகிப்து, கானா, கென்யா, மலாவி, மொசாம்பிக், மொராக்கோ உள்ளிட்ட 15 நாடுகளின் தூதர்கள் பங்கேற்றனர். 

இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவுக்கு இடையிலான வர்த்தகம் 90 பில்லியன் டாலராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.