சிசோடியாவின் மனு இன்று விசாரணை: ஜாமீன் கிடைத்தாலும் பயனில்லை!

தில்லி முன்னாள் துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில், ஜாமீன் கிடைத்தாலும் சிறையிலேயே இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

தில்லி முன்னாள் துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில், ஜாமீன் கிடைத்தாலும் சிறையிலேயே இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு புகார் வழக்கில் சிபிஐ காவல்துறையால் பிப்.26-ஆம் தேதி மனீஷ் சிசோடியோவை கைது செய்யப்பட்டார். மார்ச் 20 வரை திகார் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும், சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தொடா்பாக சிசோடியாவிடம் மாா்ச் 7-ஆம் தேதி அமலாக்கத் துறையின் மூவா் குழு விசாரணை மேற்கொண்டது. வியாழக்கிழமை இரண்டாவது முறையாக விசாரணை நடத்திய அமலாக்கத் துறையினா் இறுதியில் அவரை கைது செய்தனா்.

சிசோடியாவை இன்று பிற்பகல் 2 மணிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அமலாக்கத்துறைக்கு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அவரை 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு அளித்துள்ளது.

இந்நிலையில், சிபிஐ வழக்கில் சிசோடியா ஜாமீன் கோரிய மனு தில்லி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றது. சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும், அமலாக்கத்துறை வழக்கில் அவர் சிறையிலேயே இருக்க வேண்டியிருக்கும்.

இதனிடையே, பொய்க் குற்றச்சாட்டுகளின் பேரில் சிசோடியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு ஜாமீன் கிடைக்கும் என்பதால்தான் அமலாக்கத் துறை அவரை மீண்டும் கைது செய்துள்ளதாகவும் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com