நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஓடிடியில் இன்று வெளியான தமிழ்ப் படங்கள்!

கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற மூன்று தமிழ்ப் படங்கள் இன்று ஓடிடியில் வெளியாகியுள்ளன.

News image

கோப்புப்படம்

Updated On :10 மார்ச் 2023, 10:35 am IST

கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற மூன்று தமிழ்ப் படங்கள் இன்று ஓடிடியில் வெளியாகியுள்ளன.

ரன் பேபி ரன்

ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா, விவேக் பிரசன்னா ஆகியோர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ரன் பேபி ரன். இந்தப் படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.

Story image

பொம்மை நாயகி

ஷான் இயக்கத்தில் யோகி பாபு நடித்து வெளியான பொம்மை நாயகி திரைப்படம் பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இந்தப் படம்  ஜீ5 ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.

Story image

டாடா

கணேஷ் கே.பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ் நடிப்பில் உருவான டாடா திரைப்படம் பிப்ரவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் எதிர்பார்த்த வசூலை ஈட்டியுள்ள நிலையில், அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இன்று வெளியானது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.