
கோப்புப்படம்
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,961 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை சனிக்கிழமை அறிவித்துள்ளது.
முந்தைய நாளைவிட பாதிப்பு சற்று குறைந்துள்ளதையடுத்து கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 30,041-ஆக குறைந்துள்ளது.
நேற்று ஒரு நாளில் மட்டும் 17 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இதனால், இதுவரை கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,31,659-ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இதுவரை 220.66 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...