198 இந்திய மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான் அரசு!

கடல்சார் சர்வதேச எல்லையைத் தாண்டியதாக சிறைபிடிக்கப்பட்ட 198 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசு நேற்றிரவு விடுவித்தது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

கடல்சார் சர்வதேச எல்லையைத் தாண்டியதாக சிறைபிடிக்கப்பட்ட 198 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசு நேற்றிரவு விடுவித்தது. 

அரபிக்கடலில் கடல்சார் சர்வதேச எல்லையைக் கடக்கும் மீனவர்கள் மீது அந்தந்த நாடுகளின் சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு சுமார் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது. 

கடலில் எல்லை தெரியாமல் மீன் பிடிக்கும்போது எல்லைத் தாண்டியதாக பாகிஸ்தான் அரசு 198 மீனவர்களை கைது செய்தது. 

இந்நிலையில், பிடிபட்ட 198 இந்திய மீனவர்கள் அட்டாரி-வாகா எல்லையில் பாகிஸ்தான் அரசு வெள்ளிக்கிழமை இரவு விடுவித்தது.

மேலும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்டுத்தரக் கோரி மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com