கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் என நம்புகிறேன் என மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி குறித்து பேசிய ஓவைசி, கர்நாடக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மக்கள் காங்கிரஸ் கட்சியைத் தேர்வு செய்துள்ளனர். அவர்கள் மக்களின் நம்பிக்கையை, தேவையை பூர்த்தி செய்வார்கள் என நம்புகிறேன். இன்னும் நாம் கடினமாக உழைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.