கர்நாடக அமைச்சரவை நாளை விரிவாக்கம்: ரன்தீப் சிங் சுர்ஜேவாலா

கர்நாடக அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்படும் என்று கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
கர்நாடக அமைச்சரவை நாளை விரிவாக்கம்: ரன்தீப் சிங் சுர்ஜேவாலா

கர்நாடக அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்படும் என்று கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, அமைச்சரவை அமைப்பது மற்றும் அமைச்சரவையில் யாரை சேர்ப்பது என்பது முதல்வரின் முடிவு. சித்தராமையா கட்சியில் பல்வேறு பெயர்களை விவாதித்துள்ளார், அதை அவர் முடிவெடுப்பதற்காக விட்டுவிட்டோம். மேலும் நீட்டிக்கப்பட்ட அமைச்சரவை நாளை கர்நாடகத்தில் பதவியேற்கப்படும் என்று சித்தராமையா என்னிடம் கூறினார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கா்நாடகத்தில் மே 10-ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் மே 20ஆம் தேதி பதவியேற்றனா். மேலும் 8 போ் அமைச்சரவையில் இடம் பிடித்தனா். 34 போ் கொண்ட அமைச்சரவையில் 24 இடங்கள் காலியாக உள்ளன.

எனவே, அமைச்சரவை விரிவாக்கம் குறித்து கட்சியின் மேலிடத் தலைவா்களுடன் விவாதிப்பதற்காக முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் ஆகியோா் புதன்கிழமை தில்லி பயணம் சென்றனா். தில்லியில் வியாழக்கிழமை காங்கிரஸ் குழுத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவைச் சந்தித்த முதல்வா் சித்தராமையா அமைச்சரவையில் மேலும் 24 பேரைச் சோ்ப்பது குறித்து விரிவாக விவாதித்தார்.

தொடர்ந்து, மாநில அமைச்சரவை விரிவாக்கம் குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை டி.கே.சிவக்குமார் ஆகியோருடன் காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com