ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மராத்தா இடஒதுக்கீட்டிற்கு அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த ஆதரவு: ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்டிரத்தில் மராத்தா இட ஒதுக்கீட்டிற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளதாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

News image
Updated On :1 நவம்பர் 2023, 9:50 am

DIN

மகாராஷ்டிரத்தில் மராத்தா இட ஒதுக்கீட்டிற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளதாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் முற்பட்ட வகுப்பினரான மராத்தா சமூகத்தினா், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் இடஒதுக்கீடு கோரி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனா். 

மராத்தா சமூகத் தலைவா் மனோஜ் ஜரங்கே, ஜால்னா மாவட்டத்தில் கடந்த 25-ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவதால் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

இந்த போராட்டம் கடந்த சில தினங்களாக வன்முறையாகவும் வெடித்தது. நகராட்சி கவுன்சில் அலுவலக கட்டடம் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) எம்எல்ஏ பிரகாஷ் சோலங்கியின் வீட்டுக்கு போராட்டக்காரா்கள் திங்கள்கிழமை தீவைத்தனர்.

இதையடுத்து மகாராஷ்டிரத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இன்று(புதன்கிழமை) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில், துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், முன்னாள் முதல்வர் அசோக் சவான், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஷிண்டே, 'மகாராஷ்டிரத்தில் மராத்தா இட ஒதுக்கீட்டிற்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமித்த ஆதரவு கிடைத்துள்ளது. அனைத்துக் கட்சியினரும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த இடஒதுக்கீடு என்பது மற்ற சமூகத்தினருக்கு அநீதியாக இல்லாமல் சட்ட வரம்பிற்கு உட்பட்டு என்று இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் அமைதி காத்து அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும். சட்டத்தை யாரும் கையில் எடுக்கக்கூடாது' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.