அசாம் : 1கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்!

அசாம் மாநிலம் குவஹாட்டியில்  1 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 
அசாம் : 1கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்!
Updated on
1 min read

அசாம் மாநிலம், குவஹாட்டி நகரில் 1.2 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அசாம் மாநில காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை சனிக்கிழமை காலையில் பேருந்துகளை சோதனையிடும் பணியை மேற்கொண்டுள்ளது. அப்போது அருணாச்சலம் செல்லும் பேருந்தை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 150கிராம் அளவிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டு அதை வைத்திருந்த நபரையும் கைது செய்தனர்.

அந்த நபர் அசாம் மாநிலத்தின் பர்பெட்டா மாவட்டத்திலிருந்து வந்ததாகக் காவல்துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலை 2.30 மணியளவில் இந்த சோதனை நடத்தியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com