6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார் ராஜ்நாத் சிங்

ஜகார்த்தாவில் நடைபெற உள்ள ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டத்தில் கலந்து கொள்கிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.

News image
Updated On :14 நவம்பர் 2023, 8:37 am

DIN

ஜகார்த்தாவில் நடைபெறும் 10வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொள்கிறார்.

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நவம்பர் 16 மற்றும் 17-ஆம் தேதிகளில் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெறும் 10-வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் சந்திப்பையொட்டி, அதில் பங்கேற்கும் நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களுடன் ராஜ்நாத் சிங் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்த உள்ளார். இந்த அமர்வுகளின் போது, ​​பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான விவகாரங்கள் குறித்து அமைச்சர்கள் விவாதிப்பார்கள்.

ஏடிஎம்எம் பிளஸ்-இன் தலைவராக இருப்பதால் இந்தோனேசியா இக்கூட்டத்தை நடத்துகிறது. நவம்பர் 16-ம் தேதி நடைபெறும் இந்த சந்திப்பின்போது, ​​பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச உள்ளார். 

ஆசியான் உறுப்பு நாடுகளுக்கும், அந்த அமைப்பின் உறுப்பினரல்லாத உரையாடல் பங்கேற்பாளர்களுக்கும் இடையிலான ஒரு தளமாகும். ஆசியான் அமைப்பில் புருனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், தாய்லாந்து, மலேசியா, மியான்மர், சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய பத்து நாடுகள் உறுப்பினராக உள்ளன. மேலும் இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் உறுப்பினரல்லாமல் கூட்டத்தில் பங்கேற்று வருகின்றன. 

ஆசியான் பிளஸ் நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக 2017-ஆம் ஆண்டு முதல், இதன் அமைச்சர்கள் ஆண்டுதோறும் சந்தித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.