மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

அரசியலில் சிறந்த நடிகர் மோடி: வைரலாகும் பிரகாஷ் ராஜ் விமர்சனம்!

நடிகர் பிரகாஷ் ராஜ், பிரதமர் மோடி குறித்து தெரிவித்த கருத்து சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

Published On :

நடிகர் பிரகாஷ் ராஜ், விவாத நிகழ்ச்சியொன்றில் மோடி குறித்து பேசிய கருத்து வைரலாகி வருகிறது.

அவரிடம் முன்வைக்கப்பட்ட கேள்வியில்,  “நீங்களும் கமல்ஹாசனும் நடிகராக இருந்து தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றுள்ளீர்கள். சிறந்த நடிகர்கள் அரசியலில் வெற்றி பெற்றுள்ளார்களா? ” எனக் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த நடிகர் பிரகாஷ் ராஜ், ”மோடி இருக்கிறாரே. அவரைப் போல சிறந்த பேச்சாளரை நான் பார்த்ததே இல்லை. சிறந்த நடிகர். அவருக்கென்று பிரத்யேக உடைத்தேர்வு பிரிவு, மேக்-அப் பிரிவு, சிகை அலங்கார பிரிவு ஆகியவையெல்லாம் உள்ளன” எனப் பகடியாகக் கருத்து தெரிவித்துள்ளார்.

வைரலாகி வரும் இந்தக் கருத்துக்குப் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

சத்தீஸ்கர், ம.பி. உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் தெலுங்கானா தேர்தல் களம் குறித்து பிரகாஷ் ராஜ் பேசியுள்ளார். அவர் நேரடியாக எந்த அணி சார்பிலும் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லையெனினும் ஆளும் பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கு மறைமுகமாக தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.