மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

'பணக்காரர்கள் பற்றி மட்டுமே சிந்திக்கிறது பாஜக' - ராகுல் காந்தி

பணக்காரர்கள் பற்றி மட்டுமே சிந்திக்கிறது பாஜக என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார். 

News image

ராஜஸ்தானில் ராகுல் காந்தி...

Updated On :21 நவம்பர் 2023, 4:46 pm IST

பணக்காரர்கள் பற்றி மட்டுமே சிந்திக்கிறது பாஜக என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார். 

ராஜஸ்தானில் வருகிற நவம்பர் 25 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. 

இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அங்கு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ராஜஸ்தானில் வல்லப நகரில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, 

'நாட்டில் எந்த சாதியினர் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பது தெரியாமல் எப்படி பங்கீடு குறித்துப் பேசுவது? 

ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். 

முன்னதாக, தான் ஓபிசி வகுப்பைச் சேர்ந்தவர் என்று பிரதமர் மோடி சொன்னதில் இருந்து, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறி வருகிறேன். ஆனால், அப்போதெல்லாம் இந்தியாவில் ஒரே சாதி, ஏழை சாதி என்று பிரதமர் மோடி கூறினார். ஆனால் இந்தியாவில் இன்னொரு சாதியும் உள்ளது. அதைக் கூற அவர் மறந்துவிட்டார். அது பணக்காரர் சாதி. அது சிறப்பு சாதி. அதானி, அம்பானி சாதி. 

பாஜக, அந்த பணக்காரர்கள் பற்றி மட்டுமே சிந்திக்கிறது. குறிப்பாக அதானி குறித்து மட்டுமே பிரதமர் மோடி சிந்திக்கிறார். அவர்களுக்கே அனைத்து பணத்தையும் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார். 

நாட்டில் வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் ஆகிய பிரச்னைகளில் இருந்து மக்களை திசைதிருப்பும் நோக்கிலே பாஜக செயல்படுகிறது. வெறுப்பு பிரசாரத்தை செய்கிறது. 

பாஜக, ஆரஎஸ்எஸ்ஸின் ஒரே நோக்கம், ஏழைகள், தொழிலாளர்கள், விவசாயிகள், பழங்குடியினர், தலித்துகள் ஆகியோர் பணம் வைத்திருக்கக்கூடாது என்பதே. மாறாக பணக்காரர்களுக்கு அனைத்து பணத்தையும் வழங்குவது. 

ஆனால், காங்கிரஸ் கட்சி பழங்குடியினரின் உரிமைகளை பாதுகாக்கும். அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாக்கும்' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.