வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மோடி இந்தியாவுக்கு கடவுள் கொடுத்த வரம்: முதல்வர் சௌகான்

மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜையினியில் உள்ள புகழ்பெற்ற மகாகாளேஸ்வர் கோயிலில் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தனது மனைவியுடன் வழிபாடு மேற்கொண்டார். 

News image
Updated On :25 நவம்பர் 2023, 8:22 am

DIN

மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜையினியில் உள்ள புகழ்பெற்ற மகாகாளேஸ்வர் கோயிலில் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தனது மனைவியுடன் வழிபாடு மேற்கொண்டார். 

அதோடு, சக்தி பீடங்களில் ஒன்றான ஹர்சித்தி கோயில் மற்றும் மங்கல்நாத் கோயிலிலும் முதல்வர் சௌகான் வழிபாடு செய்தார். 

கோயிலில் தலைமை பூசாரி முதல்வருக்கு சிறப்பு வரவேற்பு அளித்து வழிபாடுகளைச் செய்தனர். 

வழிபாட்டுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மோடி, 

பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்கு கடவுள் கொடுத்த வரம். அவர் தலைமையில் நாடு அடைந்துள்ள முன்னேற்றம் கற்பனை செய்ய முடியாதது, ஆச்சரியமானது. 

பேரவைத் தேர்தலில் பாஜக அனைத்து மாநிலங்களிலும் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும், மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. 

Story image

காங்கிரஸ் தனது அறிவை இழந்துவிட்டது. உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததால் நாடு முழுவதும் சோகத்திலிருந்த நிலையில், காங்கிரஸ் மட்டும் மகிழ்ச்சியில் கிண்டல் செய்தனர். 

இந்த வெளிப்பாடு தேசத்துரோகத்தின் எல்லையை எட்டியுள்ளது. காங்கிரஸ் குருடாகி, ராகுல் காந்தி தேசியவாதியாகிவிட்டார்..வெட்கப்படுகிறோம் என்று முதல்வர் சௌகான் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.