ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

பெங்களூருவில் 15 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை!

பெங்களூருவில் ஒரு நேரத்தில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் ஒரே நேரத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

News image
Updated On :4 அக்டோபர் 2023, 6:38 am

DIN


பெங்களூருவில் ஒரு நேரத்தில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் ஒரே நேரத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

தொழிலதிபர்களின் வீடுகள் மற்றும் கார்ப்பரேட் அலுவலகங்களில் உள்ள ஆவணங்களை வருமானவரித் துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றன. 

தொழிலதிபர்கள் மற்றும் தங்க வியாபாரிகள் சிலர் வரி ஏய்ப்பு செய்ததன் பின்னணியில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகின்றனர். 

செவ்வாய்க்கிழமை இரவு சென்னை மற்றும் மும்பை அலுவலகங்களிலிருந்து அதிகாரிகள் வந்தனர்.

இதையடுத்து, இன்று காலை முதல் விஜயநகர், ஹுளிமாவு, சதாசிவநகர் மற்றும் சாங்கி டேங்க் பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது.

பெண் பல் மருத்துவர் ஒருவரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.