5 மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அமைக்கும்: நட்டா

பிரதமர் மோடி தலைமையில் அனைத்து மாநிலங்களிலும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

பிரதமர் மோடி தலைமையில் அனைத்து மாநிலங்களிலும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து நட்டா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 

ஐந்து மாநிலங்களிலும் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் பாஜக அனைத்து மாநிலங்களிலும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். அடுத்த 5 ஆண்டுகளில் மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற முழு அர்ப்பணிப்புடன் செயல்படும் இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கு நவம்பர் 7ஆம் தேதி முதல் வெவ்வேறு நாள்களில் தேர்தல் நடைபெற உள்ளது. டிசம்பர் 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com