யுபிஐ கட்டணம்! 40 காசு செலுத்தினால் செத்துவிட மாட்டீர்கள் - நீதி ஆயோக் துணைத் தலைவர்செய்யறிவு பயன்படுத்தி சிக்கிய மாணவர் தற்கொலை! ஐஐடி-மும்பை வளாகத்தில் போராட்டம்புரட்டாசி முதல் சனிக்கிழமை! காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்!!ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு7 பேருந்து பணிமனைகளில் சாா்ஜிங் வசதிக்கு ரூ.300 கோடி: தில்லி அரசு ஒப்புதல்ஆந்திரத்தில் ரூ.15,000 கோடியில் புதிய கப்பல் கட்டும் தளம்: எம்டிஎல் நிறுவனம் ஒப்பந்தம்திருப்பதி - சென்னை கடற்கரைக்கு செப். 20-இல் முன்பதிவில்லாத ரயில்

ஸ்ரீநகரில் குடியரசுத் தலைவர் முர்மு: தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி!

இரண்டு நாள் பயணமாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஜம்மு-காஷ்மீருக்கு வருகை தந்துள்ளார். 

Published On :

இரண்டு நாள் பயணமாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஜம்மு-காஷ்மீருக்கு வருகை தந்துள்ளார். 

ஸ்ரீநகரில் உள்ள விமான நிலையத்தில் வந்திறங்கிய முர்முவை, துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா வரவேற்பு அளித்தார். 

யூனியன் பிரதேசத்திற்கு முர்முவின் முதல் வருகையின்போது அவருக்கு மரியாதைக்குரிய காவலர் விருது வழங்கப்பட்டது. 

பின்னர், சினார் கார்ப்ஸ் என்று அழைக்கப்படும் ராணுவத்தின் 15வது படைப்பிரிவின் தலைமையகமான பாதாமிபாக் கண்டோன்மென்ட்டுக்குச் சென்று,  அங்குத் தியாகிகள் நினைவிடத்தில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். 

இதையடுத்து காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார்.

முர்முவின் வருகையைத் தொடர்ந்து, ஆளுநர் சின்ஹாவின் எக்ஸ் பதிவில், 

குடியரசுத் தலைவர் முர்முவுக்கு ஸ்ரீநகர் விமான நிலையத்தில் அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரது வருகையையொட்டி ஸ்ரீநகர் மற்றும் அதைத் சுற்றியுள்ள பகுதிகளில் போலீஸார், மத்திய ரிசர்வ் போலீஸ் படை உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

ட்ரோன்கள், சிசிடிவி கேமராக்கள் போன்ற சாதனங்களின் மூலம் நகரத்தில் விழிப்புணர்வைப் பராமரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன என்று அவர் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.