மணிப்பூரில் ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல்!

மணிப்பூரில் உள்ள வாங்கூ லைபாம் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களை காக்சிங் போலீஸார் பறிமுதல் செய்தனர். 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Updated on
1 min read

மணிப்பூரில் உள்ள வாங்கூ லைபாம் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களை காக்சிங் போலீஸார் பறிமுதல் செய்தனர். 

இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் கடந்த 5 மாதங்களாக வன்முறை நடைபெற்று வருகின்றது. இந்த கலவரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். பல வீடுகள் தீக்கிரையாகினர். 

இந்த நிலையில், வாங்கூ லைபாம் மலைப்பகுதியில் போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையில், சில ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களை மீட்டுள்ளனர். 

மீட்கப்பட்ட பொருள்களில் ஒரு ஏ.கே 47, 5 எஸ்எல்ஆர், ஒரு 303 ரைபிள், கைக்குண்டுகள், சீன கைக்குண்டு, உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பைப் வெடிகுண்டு உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர். 

மீட்கப்பட்ட பொருள்கள் சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டு, மேலதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com