

ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் நாளை(ஞாயிற்றுக்கிழமை) தில்லி அக்ஷர்தாம் கோயிலுக்குச் செல்கிறார்.
இந்தியாவின் தலைமையில் ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு தில்லியில் சனி, ஞாயிற்றுக்கிழமை(செப். 9, 10) என இரு நாள்கள் நடைபெறுகிறது.
இதில் கலந்துகொள்வதற்காக ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் சனிக்கிழமையே தலைநகர் தில்லிக்கு வந்தடைந்தனர். தொடர்ந்து இன்று காலை 10.30 மணியளவில் பிரகதி அரங்கத்தில் கூட்டம் தொடங்கியது. பாரத மண்டபம் பகுதியில் அனைத்து நாட்டின் தலைவர்களையும் பிரதமர் மோடி வரவேற்றார்.
இந்நிலையில், தில்லியில் உள்ள அக்ஷர்தாம் கோயிலுக்கு நாளை செல்ல உள்ளதாக அவர் கூறினார்.
பிரதமர் மோடி மீது தனக்கு மிகுந்த மரியாதை இருப்பதாவும், ஜி20 மாநாடு மகத்தான வெற்றியடையச் செய்வதில் அவருக்கு ஆதரவளிக்க ஆர்வமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.