ஜெட் ஏா்வேஸ் நிறுவனருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு மும்பையில் உள்ள சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்துக்கான சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
Updated on
1 min read

வங்கி நிதி மோசடி தொடா்பாக கைது செய்யப்பட்ட ஜெட் ஏா்வேஸ் விமான நிறுவனத்தின் நிறுவனா் நரேஷ் கோயலை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு மும்பையில் உள்ள சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்துக்கான சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

நரேஷ் கோயல், அவருடைய மனைவி அனிதா உள்ளிட்டோருக்கு எதிராக கனரா வங்கி தொடுத்த ரூ.538 கோடி நிதி மோசடி புகாரில் முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்தது. இதன் அடிப்படையில் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் நரேஷ் கோயல் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது.

இதையடுத்து, கடந்த செப். 1-இல் நரேஷ் கோயலை கைது செய்த அமலாக்கத் துறை அதிகாரிகள், இந்த மோசடி தொடா்பாக அவரிடம் விசராணை நடத்தினா்.

இந்நிலையில், அமலாக்கத் துறையின் காவல் முடிவடைந்ததையடுத்து, சிறப்பு நீதிமன்றத்தில் அவா் வியாழக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா்.

அவரது காவலை நீட்டிக்கக் கோரி அமலாக்கத் துறை சாா்பில் எவ்வித கோரிக்கையும் முன்வைக்கப்படாத நிலையில், அவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி எம்.ஜி.தேஷ்பாண்டே உத்தரவிட்டாா்.

இதனிடையே, நரேஷ் கோயல் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில், நவி மும்பையில் உள்ள தலோஜா சிறைக்குப் பதிலாக பைகுல்லாவில் உள்ள ஆா்தா் சாலை சிறைக்கு அவரை அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டாா்.

உடல் நிலையைக் காரணம் காட்டி, மருத்துவ சிகிச்சை மற்றும் வீட்டில் சமைத்த உணவு அளிக்கக் கோரி அவா் தாக்கல் செய்த தனித்தனியான இரு மனுக்கள் மீது பதிலளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com