
புது தில்லி: பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் 4 ஆயிரம் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு இன்று இடம்பெயர்வதை முன்னிட்டு, பழைய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு விடைகொடுக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார்.
இதையும் படிக்க.. சென்னை சாலைகள் மோசமாக இருப்பதாக புகார்: முதல்வர் ஸ்டாலின்
அப்போது அவர் பேசுகையில், அரசியல் சாசனத்துக்கு பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில்தான் வடிவம் கொடுக்கப்பட்டது. பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் 4 ஆயிரம் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நாட்டின் வளர்ச்சிக்கு அனைவரும் உறுதியேற்க வேண்டும். புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு இன்று இடம்பெயர்வது புதிய எதிர்காலத்துக்கான தொடக்கம் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.