Enable Javscript for better performance
Revised compensation for railway accident victims- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    ரயில் விபத்துகளில் இறந்தவர்களுக்கான இழப்பீடு தொகை 10 மடங்காக உயர்வு!

    By DIN  |   Published On : 23rd September 2023 02:42 PM  |   Last Updated : 23rd September 2023 02:56 PM  |  அ+அ அ-  |  

    train1

    கோப்புப்படம்

    ரயில் விபத்துகளில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு வழங்கும் இழப்பீடுத் தொகை 10 மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

    இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் ரயில்வே சட்டம், 1989 பிரிவு 124, 124ஏ ஆகிய பிரிவுகளைத் திருத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. 

    பிரிவு 124 இன் கீழ், ரயில் விபத்துக்களில்(Train accident) உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சமும் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.2.5 லட்சமும் லேசான காயங்களுக்கு ரூ.50,000-மும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. 

    பிரிவு 124ஏ -ன் கீழ் எதிர்பாராத சம்பவங்களில்(untoward incidents) இறந்தவர்களுக்கு வழங்கப்படும் கருணைத் தொகை ரூ. 1.5 லட்சமாகவும் படு காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம், லேசான காயங்களுக்கு ரூ.5 ஆயிரம் என உயர்த்தப்பட்டுள்ளது. 

    இதையும் படிக்க | சந்திரபாபு நாயுடுவிடம் சிஐடி போலீசார் விசாரணை!

    அதேநேரத்தில் ஆளில்லா ரயில்வே கிராசிங்குகளில்(ரயில்வே தவறாக இருந்தால்) ஏற்பட்ட விபத்துக்களில் இறந்தவர்களுக்கு  ரூ.5 லட்சம், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.2.5 லட்சமும், லேசான காயங்களுக்கு ரூ.50,000 கருணைத் தொகையாக வழங்கப்பட உள்ளது. 

    படுகாயமடைந்த பயணிகள் 30 நாட்களுக்கு மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் அவர்களுக்கு கூடுதல் கருணைத் தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி ரயில் விபத்து(Train accident)  என்றால், 30 நாள்களுக்குப் பிறகு, ஒவ்வொரு 10 நாள் முடிவில் அல்லது டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட தேதியில் (இவற்றில் எது முதலாவதோ) நாள் ஒன்றுக்கு ரூ. 3,000 வழங்கப்படும். 

    எதிர்பாராத சம்பவங்கள்(untoward incidents) நடந்தால் ஒவ்வொரு 10 நாள் முடிவில் அல்லது டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட தேதியில், நாளொன்றுக்கு ரூ. 1,500 கூடுதல் கருணைத் தொகை வழங்கப்படும். 6 மாதங்கள் வரை இந்த கூடுதல் தொகை வழங்கப்படும். 

    படுகாயமடைந்தவர்களுக்கு அதிகபட்சமாக 12 மாதங்கள் கருணைத் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp