நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குஜராத்: பழைய பாலம் இடிந்து விழுந்ததில் 4 பேர் காயம்

குஜராத்தில் பழைய பாலம் இடிந்து விழுந்ததில் 4 பேர் காயமடைந்தனர்.  

News image
Updated On :25 செப்டம்பர் 2023, 4:42 am

DIN

குஜராத்தில் பழைய பாலம் இடிந்து விழுந்ததில் 4 பேர் காயமடைந்தனர். 

குஜராத் மாநிலம், சுரேந்திரநகர் மாவட்டத்தில் போகாவோ ஆற்றின் பழைய பாலத்தின் ஒரு பகுதி ஞாயிற்றுக்கிழமை மாலை இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

பாலம் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து ஆற்றில் விழுந்த நான்கு பேரை கிராம மக்கள் மீட்டனர். 

பின்னர் 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

பாலம் இடிந்து விழுந்ததை அடுத்து, அப்பகுதியில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. சாலைகள் மற்றும் வீட்டுவசதி துறை பாலம் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

பாலத்தில் கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தும், தடையை மீறி டிரக் ஒன்று கடக்க முயன்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.