ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஒரே நாளில் 3 குழந்தைத் திருமணங்கள்!

நாந்தேட் மாவட்டத்தில் மூன்று குழந்தைத் திருமணங்கள் நிறுத்தம்

News image

மாதிரி படம்

Updated On :2 ஏப்ரல் 2024, 2:09 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மகாராஷ்டிர மாநிலம் நாந்தேட் மாவட்டத்தில் ஒரே நாளில் 3 குழந்தைத் திருமணங்களை தடுத்ததாக மாவட்ட அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறையால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

குழந்தைத் திருமணங்கள் குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனையடுத்து முகேத் மற்றும் கந்தார் தாலுகாக்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அந்த பகுதிக்கு விரைந்த மாவட்ட அதிகாரிகள் மற்றும் மகளிர் வளர்ச்சித் துறையினர் திருமணத்தை நிறுத்தி குழந்தைகளை மீட்டனர்.