குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

பெண்ணுக்கு முத்தம் கொடுத்து வாக்கு கேட்ட பாஜக வேட்பாளர்!

இதன் புகைப்படங்களை திரிணமூல் காங்கிரஸ் கட்சி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

News image
Updated On :9 ஏப்ரல் 2024, 5:50 pm IST

மேற்கு வங்கத்தில் பாஜக வேட்பாளரான ககென் முர்மு பெண்ணுக்கு முத்தம் கொடுத்து வாக்கு சேகரித்த புகைப்படங்களுக்கு இணையத்தில் கண்டனம் குவிந்து வருகிறது.

மேற்கு வங்க மாநிலம் மால்டானா வடக்கு தொகுதி எம்.பி.யாக இருப்பவர் ககென் முர்மு. இவர் இதே தொகுதியில் தற்போது பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.

இதனையொட்டி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பெண்ணுக்கு முத்தம் கொடுத்து வாக்கு சேகரித்தார்.

Story image

மக்களுடம் வாக்குறுதிகள் கொடுத்து வாக்கு சேகரிப்பதற்கு பதிலாக, அநாகரிகமாக முத்தம் கொடுத்து வாக்கு சேகரிப்பதாக அவருக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இதன் புகைப்படங்களை திரிணமூல் காங்கிரஸ் கட்சி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. குத்துச்சண்டை வீராங்கனைகள் முதல் ஓட்டு போடும் சாதாரண மகளிர் வரை அனைவரிடமும் அநாகரிகமாக நடப்பதையே பாஜக தலைமையிலுள்ளவர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

Story image

dinamani

மோடியின் குடும்பத்தினர் என தங்களை சொல்லிக்கொள்ளும் பாஜக எம்.பி. செய்யும் வேலையை இது காட்டுகிறது. இவர்கள் அதிகாரத்துக்கு வந்தால் என்ன நடக்கும் என சிந்தித்துப் பாருங்கள் என திரிணமூல் கட்சி பதிவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.