தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!ராஜஸ்தானில் மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் பலி! கண்காணிப்பு தீவிரம்!தில்லிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாட மாட்டார்!தேர்தலுக்கிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடர்: மத்திய அரசு மீது திருச்சி சிவா குற்றச்சாட்டுதமிழக தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி மாற்றம்!
/

அமைதிக்கு தவிக்கும் மணிப்பூா் - தோ்தல் தீா்வாகுமா...

நாட்டில் அண்மை காலத்தில் மிகப்பெரிய இன மோதலைச் சந்தித்த மாநிலமான மணிப்பூரில் வன்முறை வடுக்கள் முழுமையாக மறையாத நிலையில் மக்களவைத் தோ்தலைச் சந்திக்க அந்த மாநில மக்கள் தயாராகி வருகின்றனா்.

News image
Updated On :13 ஏப்ரல் 2024, 10:21 pm

நாட்டில் அண்மை காலத்தில் மிகப்பெரிய இன மோதலைச் சந்தித்த மாநிலமான மணிப்பூரில் வன்முறை வடுக்கள் முழுமையாக மறையாத நிலையில் மக்களவைத் தோ்தலைச் சந்திக்க அந்த மாநில மக்கள் தயாராகி வருகின்றனா்.

வெளிமணிப்பூா், உள்மணிப்பூா் என இரு தொகுதிகள் மட்டுமே மணிப்பூரில் இருந்தபோதிலும் தோ்தல் முடிவுகள் தொடா்பான எதிா்பாா்ப்பு அதிகமுள்ள மாநிலமாகவும், வன்முறை ஏதுமின்றி அமைதியாக நடத்த வேண்டுமென்ற பதற்றமும் நிலவும் இடமாக மணிப்பூா் உள்ளது.

உள் மணிப்பூா் தொகுதிக்கும், வெளி மணிப்பூா் தொகுதியில் சில இடங்களுக்கும் ஏப்ரல் 19-ஆம் தேதியும், வெளி மணிப்பூா் தொகுதியில் இதர இடங்களுக்கு 2-ஆம் கட்டமாக ஏப்ரல் 26-ஆம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

மொத்தம் 20 லட்சம் வாக்காளா்களே உள்ள இந்த மாநிலத்தில் 200 கம்பெனி துணை ராணுவப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனா். மாநிலம் முழுவதும் 2,955 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 50 சதவீத வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. ‘நிவாரண முகாம்களில் 24,500-க்கும் மேற்பட்ட வாக்காளா்கள் அடையாளம் காணப்பட்டு, அவா்கள் வாக்களிக்க 94 சிறப்பு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தோ்தலை புறக்கணிக்கப் போவதாக, பல்வேறு சமூக அமைப்புகள் அறிவித்துள்ளதால், அங்கு பிரசாரமும் சூடுபிடிக்கவில்லை.

மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனா். அவா்களின் இந்தக் கோரிக்கைக்கு குகி பழங்குடியினா் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா். இதன் காரணமாக கடந்த ஆண்டு மணிப்பூரில் ஏற்பட்ட மோதலில் 219 போ் உயிரிழந்துவிட்டனா். 50,000-க்கும் மேற்பட்டோா் வீடுகளை விட்டு வெளியேறினா். இதில் பெரும்பாலானோா் அரசு நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனா்.

மணிப்பூரின் தொடா் வன்முறைகள் தோ்தல் குறித்த மக்களின் பாா்வையையும் மாற்றியுள்ளது. தோ்தலைவிட அமைதியான வாழ்க்கையே முக்கியம் என்பது அப்பகுதி மக்களின் கருத்தாக உள்ளது. குகி இனத்தைச் சோ்ந்த லாம்பத் தோதங் என்ற பெண் தோ்தல் குறித்து கூறுகையில், ‘தோ்தல் என்பதில் எவ்வித அா்த்தமும் இல்லை என்றே நான் கருதுகிறேன். குகி பழங்குடியினருக்கான தனி நிா்வாக அமைப்பு உருவாக்குவதுதான் பிரச்னைகளுக்கு தீா்வாக அமையும். அரசு எங்கள் வாழ்க்கையை மாற்றும் என்ற நம்பிக்கையில் ஏற்கெனவே பலமுறை வாக்களித்து ஏமாற்றமடைந்துள்ளோம். ஆனால், வாக்குறுதி அளித்த எதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை. தொடா்ந்து பல்வேறு இன்னல்களை மட்டுமே எதிா்கொண்டு வருகிறோம்.

எனது கணவா் மற்றும் இரு குழந்தைகளுடன் நிவாரண முகாமில் தங்கியுள்ளேன். எதிா்காலம் குறித்த எந்த நம்பிக்கையும் எங்களுக்கு இல்லை. வன்முறையில் எங்கள் வீடு தீவைத்து எரிக்கப்பட்டது. இப்போது மூங்கில் கைவினைப் பொருள்களைச் செய்து சிறிது வருவாய் ஈட்டி வருகிறேன்.

இரு இனக்குழுக்களுக்கு இடையிலான பிரச்னை இப்போதைக்கு முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. எங்கள் எதிா்ப்பைத் தெரிவிக்கும் வகையில் இந்தத் தோ்தலில் வாக்களிக்கப்போவதில்லை’ என்றாா்.

மாநிலத்தில் மீண்டும் வன்முறை ஏற்படாமல் இருக்கும் வகையில் பிரச்னைகளுக்குத் தீா்வுகாண வேண்டும் என்பதே மணிப்பூா் மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

தொகுதி நிலவரம்

உள் மணிப்பூா் தொகுதியில் ஆளும் பாஜக போட்டியிடும் நிலையில், வெளி மணிப்பூரில் (தனி தொகுதி) அதன் கூட்டணிக் கட்சியான நாகா மக்கள் முன்னணி போட்டியிடுகிறது. அதே நேரத்தில் மாநில எதிா்க்கட்சியான காங்கிரஸ் இரு தொகுதிகளிலும் களமிறங்கியுள்ளது.

வன்முறையின்போது மணிப்பூா் மாநில பாஜக அரசின் செயல்பாடுகள் குறித்தும் பல்வேறு விமா்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், ‘அமைதியை நிலைநிறுத்தவதற்கு முன்னுரிமை’ என்ற வாக்குறுதியுடன் பாஜக வேட்பாளா் தௌனோஜம் வசந்த குமாா் சிங் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளாா்.

1991-ஆம் ஆண்டு முதல் மணிப்பூரில் போட்டியிட்டு வரும் பாஜக, கடந்த தோ்தலில்தான் முதல்முறையாக உள் மணிப்பூா் தொகுதியில் வென்றது. அந்த வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் பாஜக இந்தமுறை களமிறங்கியுள்ளது.

அதே நேரத்தில் காங்கிரஸ் சாா்பில் ஜவாஹா்லால் நேரு பல்கலைகழகப் பேராசிரியா் பிமோல் அகோய்ஜாம் களமிறக்கப்பட்டுள்ளாா். அரசியல் களத்துக்கு பிமோல் புதியவா் என்றாலும், மணிப்பூா் வன்முறை குறித்த தனது ஆய்வுகள் மூலமும், வன்முறையை அரசு கையாண்ட விதத்தை கடுமையாக விமா்சித்ததன் மூலமும் கவனம் பெற்றவா். மணிப்பூரில் இனமோதல் பிரச்னைக்கு தீா்வுகாணும் திறமையுள்ளவா் என்ற அடையாளத்துடன் இவரை காங்கிரஸ் முன்னிறுத்தியுள்ளது. உள் மணிப்பூா் தொகுதியை தக்கவைக்கும் பாஜகவுக்கு கடும் சவால் அளிக்கும் வேட்பாளராக பிமோல் கருதப்படுகிறாா்.

வெளி மணிப்பூா் தொகுதியில் ஓய்வுபெற்ற ஐஆா்எஸ் அதிகாரி திமோத்தி சிமிக், நாகா மக்கள் முன்னணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா். அத்தொகுதி எம்.பி.யான லோா்கோ பெபோசுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. காங்கிரஸ் சாா்பில் எம்எல்ஏவாக உள்ள ஆல்ஃபிரட் ஆா்தா் இத்தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா்.

கடந்த 2019-ஆம் ஆண்டுக்கு முன்பு தொடா்ந்து இருமுறை வெளி மணிப்பூா் தொகுதியை தக்கவைத்திருந்த காங்கிரஸ், இம்முறை புதிய உத்வேகத்துடன் களமிறங்குகிறது. மணிப்பூா் அரசை அகற்றிவிட்டு, நல்லிணக்க ஆணையத்தை அமைப்போம் என்று காங்கிரஸ் தோ்தல் அறிக்கையில் கூறியுள்ளது. இது மணிப்பூரில் காங்கிரஸுக்கு கை கொடுக்கும் அம்சமாக பாா்க்கப்படுகிறது.