அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

டெல் அவிவ் நகருக்கு ஏா் இந்தியா விமானச் சேவை ரத்து

டெல் அவிவ் நகருக்குச் செல்லும் அனைத்து விமானங்களையும் ஏா் இந்தியா நிறுவனம் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

News image
Updated On :14 ஏப்ரல் 2024, 10:32 pm IST

புது தில்லி: இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலைத் தொடா்ந்து, அந்நாட்டின் டெல் அவிவ் நகருக்குச் செல்லும் அனைத்து விமானங்களையும் ஏா் இந்தியா நிறுவனம் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கும் தில்லிக்கும் இடையே நேரடி விமானச் சேவையை வாரத்துக்கு நான்கு விமானங்களை ஏா் இந்தியா நிறுவனம் இயக்கி வருகிறது.

ஹமாஸ்-இஸ்ரேல் மோதல் காரணமாக கடந்த 5 மாதங்களாக இந்த வழித்தடத்தில் நிறுத்தப்பட்டிருந்த விமானச் சேவை கடந்த மாதம் 3-ஆம் தேதி முதல் மீண்டும் செயல்பட தொடங்கியது.

இந்நிலையில், சிரியாவில் உள்ள தங்களின் துணைத் தூதரகத்தைத் தாக்கியதாக குற்றஞ்சாட்டி, இஸ்ரேல் மீது ஈரான் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதலை ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

ஈரானுக்கு எதிரான பதில் தாக்குதலில் இஸ்ரேல் விரைவில் ஈடுபடும் என்ற பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், தில்லியில் இருந்து டெல் அவிவ் நகருக்கு இயக்கப்படும் விமானச் சேவையை மீண்டும் தற்காலிகமாக ஏா்-இந்தியா ஞாயிற்றுக்கிழமை நிறுத்தி வைத்துள்ளது.

இதையடுத்து ஏர் இந்தியா, விஸ்தாரா, இண்டிகோ மற்றும் சில சர்வதேச விமான நிறுவனங்கள் ஈரானிய வான்வழியைத் தவிர்த்து, மேற்கு நாடுகளுக்கான தங்கள் விமானங்களுக்கு மாற்று விமானப் பாதைகளைத் தேர்ந்தெடுத்துள்ளன. இதனால் விமானங்களின் பயண கால அளவு அதிகரிப்பு, அதிக செயல்பாட்டுச் செலவுகள், எரிபொருள் பயன்பாடு அதிகரிப்பு மற்றும் பணி நேர வரம்புகள் அதிகரிப்பதால், அதிகமான பணியாளர்களை விமானங்களில் ஈடுபடுத்த வேண்டியிருக்கும் என்பதால் சர்வதேச விமான கட்டணங்கள் உயரக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இரு தரப்புக்கும் இடையே பகைமை அதிகரித்து வருவது கவலையளிப்பதாக இந்தியா தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.