மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஒரு முறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 வாக்குகள் செய்தியில் உண்மையில்லை: தேர்தல் ஆணையம்

ஒரு முறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 வாக்குகள் செய்தியில் உண்மையில்லை: தேர்தல் ஆணையம்

News image

இருசக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு சென்ற விவகாரம்: வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு?

Updated On :18 ஏப்ரல் 2024, 9:24 am

DIN

புது தில்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முறைகேடாகப் பயன்படுத்த வாய்ப்பே இல்லை, ஒரு முறை அழுத்தினால், பாஜகவுக்கு இரண்டு வாக்குகள் விழுவதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

காசர்கோட்டில் மாதிரி வாக்குப்பதிவின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒரு முறை தாமரை சின்னத்தை அழுத்தினால் இரண்டு வாக்குகள் பதிவானதாக எதிர்க்கட்சியினர் புகார் அளித்துள்ளனர.

காசர்கோடு மக்களவைத் தொகுதிக்கு பயன்படுத்தப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சிகளின் பிரமுகர்களின் முன்னிலையில் நேற்று தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் மாதிரி வாக்குப்பதிவு நடத்தி காண்பிக்கப்பட்டது.

அப்போது, பாஜகவுக்கு ஒரு முறை வாக்களித்து பரிசோதித்த போதும், இரண்டு வாக்குகள் பதிவானதாகக் காண்பிக்கப்பட்டதாக அங்கிருந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். இந்தப் புகார் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்திருந்தது.

இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் இன்று தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. அதில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முறைகேடாகப் பயன்படுத்த வாய்ப்பே இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அனைத்துப் பாதுகாப்பு அம்சங்களும் உறுதி செய்யப்பட்ட பிறகே வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தேர்தல் ஆணையத்தின் மீது எவ்வித பழியும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கேரள மாநிலம் காசர்கோட்டில் மாதிரி வாக்குப்பதிவின்போது, பாஜகவுக்கு கூடுதல் வாக்குகள் பதிவான செய்தியில் உண்மையில்லை. கூடுதல் வாக்குகள் பதிவானதாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது என்று உச்ச நீதிமனறத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் விவிபேட் இயந்திரத்தில் விழும் வாக்குச்சீட்டுகளை எண்ணி சரிபார்க்கக் கோரிய வழக்கில் தேர்தல் ஆணையம் மேலும் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.