தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

சந்தேஷ்காளியில் சிபிஐ விசாரணை

சந்தேஷ்காளியில் சிபிஐ விசாரணை

Updated On :20 ஏப்ரல் 2024, 4:54 pm

மேற்கு வங்கத்தின் சந்தேஷ்காளியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை, நில அபகரிப்பு குற்றச்சாட்டு தொடா்பாக சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை நடத்தினா்.

சந்தேஷ்காளியில் உள்ள சுந்தரிகாளி பகுதியில் பாதிக்கப்பட்ட பெண்களிடம் சிபிஐ அதிகாரிகளின் ஒரு குழுவினா், தனித் தனியாக பேசி அவா்களின் பதில்களை ஆவணப்படுத்தினா்.

மற்றொரு குழுவினா் சந்தேஷ்காளி காவல் நிலையத்துக்குச் சென்று போலீஸாா் விசாரணை குறித்து கேட்டறிந்தனா். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவா்களின் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேற்கு வங்கத்தின் சந்தேஷ்காளியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை, நில அபகரிப்பு நடைபெற்ாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் தொடா்புடைய ஆளும் திரிணமூல் காங்கிரஸின் மூத்த தலைவா் ஷாஜஹான் ஷேக் தலைமறைவானாா். பின்னா், அவா் கைது செய்யப்பட்டாா்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தை சிபிஐ விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய கொல்கத்தா உயா்நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது.

முன்னதாக, மேற்கு வங்க ரேஷன் பொருள் விநியோக திட்ட முறைகேடு தொடா்பான வழக்கில் சந்தேஷ்காளியில் உள்ள ஷாஜஹான் ஷேக்கின் இடங்களில் கடந்த ஜனவரி 5-ஆம் தேதி சோதனை நடத்த சென்ற அமலாக்கத் துறையினரை அவரது ஆதரவாளா்கள் தாக்கினா்.