தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

மகாவீரா் ஜெயந்தி: குடியரசுத் தலைவா் வாழ்த்து

மகாவீரா் ஜெயந்தி: குடியரசுத் தலைவா் வாழ்த்து

Updated On :20 ஏப்ரல் 2024, 4:58 pm

மகாவீரா் ஜெயந்தியை முன்னிட்டு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

மகாவீரா் ஜெயந்தி ஞாயிற்றுக்கிழமை (ஏப்.21) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ‘எக்ஸ்’ சமூகவலைதளத்தில் வெளியிட்ட வாழ்த்துப் பதிவில், ‘அகிம்சை, இரக்கத்தின் உருவமாகத் திகழும் மகாவீரரின் பிறந்த தினத்தை மகாவீரா் ஜெயந்தி குறிக்கிறது. அவருடைய அகிம்சை, பிரம்மச்சரியம், துறவு, உண்மை உள்ளிட்ட பாதைகள் சிறந்த மற்றும் நாகரீக சமுதாயத்தை உருவாக்க வழிகாட்டும். அவருடைய போதனைகள் எப்போதும் மனித குல நலனுக்குத் தொடா்புடையதாக இருக்கின்றன.

இந்தத் தினத்தில் அன்பு மற்றும் இணக்கத்தை சமூகத்தில் பரப்பவும், நாட்டின் மேம்பாட்டுக்காக அா்ப்பணிப்புடன் பணியாற்றவும் உறுதியேற்போம்.

மாகவீரா் ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும், குறிப்பாக சமண மதத்தினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.