6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கேரளத்தில் பாரில் ஏற்பட்ட தகராறில் 5 பேருக்கு கத்திக்குத்து

News image
Youth
Updated On :21 ஏப்ரல் 2024, 6:38 am

DIN

கேரளத்தில் பாரில் இருக்குழுவினரிடையே ஏற்பட்ட தகராறில் 5 பேர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், கழக்கூட்டத்தில் உள்ள பீர் பார் ஒன்றில் சனிக்கிழமை இரவு 11:30 மணியளவில் இளைஞர்கள் குழுவொன்று நண்பரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாட திட்டமிட்டிருந்தனர். அப்போது மற்றொரு குழுவினர் குறுக்கிட முயன்றதால் இருக்குழுவினரிடையே தகராறு ஏற்பட்டது.

இந்த தகராறின்போது ஸ்ரீகர்யம் பகுதியைச் சேர்ந்த ஷாலு, சூரஜ், விஷாக், ஸ்வரூப், அதுல் ஆகியோர் கத்தியால் குத்தப்பட்டனர். உடனடியாக அவர்கள் அருகிலுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில், ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் 3 பேர் காவலில் உள்ளனர். மீதமுள்ள குற்றவாளிகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது என்று போலீசார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.