காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

கிருஷ்ணா தண்ணீரை நிறுத்தியது ஆந்திரம்: மிச்ச தண்ணீர்?

கிருஷ்ணா தண்ணீரை நிறுத்தியது ஆந்திரம், மிச்ச தண்ணீர் ஜூனில் திறப்பதாக உறுதி

Published On :24 ஏப்ரல் 2024, 5:58 pm IST

கண்டலேறு நீர்த்தேக்கத்தில், தண்ணீர் இருப்புக் குறைந்திருப்பதாகக் கூறி, ஆந்திர மாநில அரசு, கிருஷ்ணா ஆற்றில் தமிழகத்துக்குத் திறந்துவிடப்படும் தண்ணீரை நிறுத்திவிட்டது.

மாறாக, வரும் ஜூன் மாதத்தில், தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் போதுமான மழை பெய்து நீர் இருப்பு வந்ததும், தமிழகத்துக்குக் கொடுக்க வேண்டிய நிலுவை தண்ணீர் 4 டிஎம்சியை திறந்துவிடுவதாக ஆந்திர அரசு உறுதி அளித்துள்ளது.

இரு மாநிலங்களுக்கும் இடையேயான ஒப்பந்தத்தின்படி, ஆந்திர மாநிலம் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்துக்கு 12 டிஎம்சி தண்ணீரை திறக்க வேண்டும். அதில், 8 டிஎம்சி தண்ணீர் ஜூலை முதல் அக்டோபர் காலத்திலும், இரண்டாவது நிலுவை ஜனவரி - ஏப்ரல் காலத்திலும் கொடுக்கப்படவேண்டும்.

ஆனால், 2023 - 24ஆம் நீர் ஆண்டுக் காலத்தில் தமிழகம் இதுவரை வெறும் 2.412 டிஎம்சி தண்ணீரைத்தான் பெற்றுள்ளது. கண்டலேறு அணையின் நீர்த்தேக்கம் 7.4777 டிஎம்சியாக உள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 68.03 டிஎம்சியாகும். இந்த தண்ணீர் சென்னையின் குடிநீர்த் தேவைக்குப் பயன்படுத்தப்பட வேண்டியதாகும்.

இந்த ஆண்டு தொடக்கத்தில், சென்னையின் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் ஏரிகளில் போதிய அளவில் தண்ணீர் இருந்தது. அதனால், வடகிழக்குப் பருவமழையின்போது தண்ணீர் திறக்க வேண்டாம் என தமிழக அரசு தரப்பில் ஆந்திரத்தைக்கேட்டுக்கொண்டது. ஆனால், தற்போது ஒட்டுமொத்தமாக சென்னையில் உள்ள நீர்த்தேக்கங்களில் வெறும் 6.980 டிஎம்சி தண்ணீர்தான் உள்ளது.

ஒரு சில வாரங்களுக்கு முன்பே, கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டது. ஒருவேளை, தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டாலோ, தண்ணீர் அளிக்கப்படவில்லையென்றாலோ, அந்த ஆண்டுக்கான தண்ணீர் கணக்கு முடிந்துவிடும், ஜூன் அல்லது ஜூலையில் புதிய கணக்கு அதாவது 2024 - 25ஆம் ஆண்டுக்கான கணக்குதான் தொடங்கும் என்றும் அதிகாரிகள் விளக்கம் கொடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.