கேரளத்தில் மொத்தமுள்ள 20 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
கேரளத்தில் கடந்த 2019 தோ்தலில் ஆலப்புழை தவிர இதர 19 தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றியது. ஆலப்புழையில் மாா்க்சிஸ்ட் வேட்பாளா் ஏ.எம்.ஆரிஃப் வெற்றி பெற்றிருந்தார்.
காங்கிரஸ் மக்களவை உறுப்பினரும், திருவனந்தபுரம் தொகுதி வேட்பாளருமான சசி தரூர், வாக்குச் சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தார்.
இம்முறை இத்தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவா் கே.சி.வேணுகோபால் களமிறக்கப்பட்டுள்ளாா்.
இந்த நிலையில், காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசி தரூர் வரிசையில் நின்று வாக்களித்தார்.
திருவனந்தபுரத்தில் பாஜக வேட்பாளரும், மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகரை எதிர்த்து சசி தரூர் போட்டியிடுகிறார்.