கா்நாடகத்தில் முதல்கட்டமாக 14 மக்களவைத் தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை (ஏப். 26) வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தோ்தலில் 247 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்; 2.88 கோடி வாக்காளா்கள் வாக்களிக்கவுள்ளனா்.
கா்நாடக மாநிலத்தில் மொத்தமுள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் முதல்கட்டமாக 14 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது.
முதல்கட்டத் தோ்தலில் உடுப்பி, ஹாசன், தென்கன்னடம், சித்ரதுா்கா, தும்கூரு, மண்டியா, மைசூரு, சாமராஜ் நகா், பெங்களூரு ஊரகம், பெங்களூரு வடக்கு, மத்திய பெங்களூரு, பெங்களூரு தெற்கு, சிக்பளாப்பூா், கோலாா் ஆகிய 14 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று(ஏப். 26) காலை பெங்களூருவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
வாக்களித்தப் பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர், ஒருவர் நம்பும் வேட்பாளரை தேர்வு செய்வது மிக முக்கியம் என்று தெரிவித்தார்.
"நாடாளுமன்றத்தில் எனது குரலாக யார் குரல் கொடுப்பார்கள் என்று எனது வாக்கானது என்னுடைய உரிமையை நிலை நாட்டுகிறது.
நீங்கள் நம்பும் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம், கடந்த 10 ஆண்டுகளில் நான் கண்ட வெறுப்பு மற்றும் பிளவுபடுத்தும் அரசியல் மாற்றத்திற்காக நான் நம்பும் வேட்பாளருக்கு வாக்களித்துள்ளேன்." என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை ஆய்வு

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

இயந்திரக் கோளாறு: தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

மின்னணு இயந்திரத்தில் கோளாறு: தாமதமான வாக்குப் பதிவு
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |




