திகார் சிறையில் கேஜரிவாலை சந்திக்க சுனிதாவுக்கு அனுமதி!

கேஜரிவாலை சந்திப்பதற்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி/
திகார் சிறையில் கேஜரிவாலை சந்திக்க சுனிதாவுக்கு அனுமதி!
Updated on
1 min read

தில்லி முதல்வர் கேஜரிவாலை சந்திக்க அவரது மனைவி சுனிதா கேஜரிவாலுக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாக ஆம் ஆத்மி திங்கள்கிழமை தெரிவித்தது.

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை அமலாக்கத்துறை கடந்த மாா்ச் 21-ஆம் தேதி கைது செய்தது. தொடர்ந்து ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அவா் திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கேஜரிவாலை சந்திப்பதற்கு சுனிதா கேஜரிவாலுக்கு திகார் சிறை நிர்வாகம் இன்று அனுமதி வழங்கியுள்ளதாகவும், இந்த சந்திப்பின்போது தில்லி அமைச்சரவை அமைச்சர் அதிஷியும் உடல் இருப்பார் என்று கட்சி தகவல் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை முதல்வரைச் சந்திக்க சிறை அதிகாரிகள் அனுமதி மறுத்ததாக ஆம் ஆத்மி கூறியது. இந்த குற்றச்சாட்டை சிறை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் செவ்வாய்க்கிழமை கேஜரிவாலை சந்திக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com