பிகாரில் 299ஆக உயர்ந்த டெங்கு பாதிப்பு!

பிகாரில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் அச்சம்.
டெங்கு பாதிப்பு
டெங்கு பாதிப்பு
Updated on
1 min read

பிகார் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24 பேருக்கு டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ள நிலையில், இதுவரை மொத்த பாதிப்பு 299 ஆக உயர்ந்துள்ளது.

புதிய வழக்குகளில் சம்பத் சக், பாட்னா, பாட்லிபுத்ரா, பாங்கிபூர் மற்றும் கனகர்பாக் ஆகிய இடங்களில் ஒன்பது பேருக்கும் பாதிப்பு பதிவாகியுள்ளது. இந்தாண்டு பாட்னாவில் மொத்த தொற்று நோய்களின் பாதிப்பு 68 ஆக உயர்ந்துள்ளது.

முசாபர்பூரில் 4, கயாவில் 3, வைஷாலி மற்றும் நாளந்தாவில் தலா 2, சரண், ககாரியா, பெகுசராய் மற்றும் நவாடாவில் தலா ஒரு வழக்குகள் பதிவாகியுள்ளன.

அனைத்து மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவு மருந்துகள் இருப்பதை உறுதி செய்யுமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

மேலும், அனைத்து கல்லூரி மற்றும் மருத்துவமனைகளின் நிர்வாகங்கள் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பிரத்யே வார்டுகளை தயார் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளன.

கொசுக்கள் பெருகும் பகுதிகளில் லார்வா எதிர்ப்பு மருந்துகளைத் தெளித்தல் மற்றும் புகை துப்பாக்கிகளைப் பயன்படுத்துதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள நகராட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாட்னாவைச் சேர்ந்த பிரபல பொது மருத்துவர் சுனில் குமார் கூறுகையில்,

டெங்கு, மலேரியா மற்றும் சிக்குன்குனியா போன்ற வெப்பத்தால் பரவும் நோய்களின் அறிகுறியாக அதிக காய்ச்சல், உடல் வலி மற்றும் வாந்தி ஆகியவை தென்பட்டால் உடனே மருத்துவர்களை அணுக வேண்டும். இந்த சூழ்நிலைகளில் பிளேட்லெட் எண்ணிக்கையைக் கண்காணித்து முறையான சிகிச்சையைப் பெறுவது மிகவும் முக்கியம் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com