பட்டியலின (எஸ்.சி) பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு அதிகாரம் உண்டு என்ற உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை எதிா்த்து லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ் பாஸ்வான்) மேல்முறையீடு செய்யவுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவரும், பாஜக கூட்டணியின் மத்திய அமைச்சருமான சிராக் பாஸ்வான் சனிக்கிழமை தெரிவித்தாா்.
இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ‘கல்வி, பொருளாதாரம் என நல்ல பின்புலத்தில் இருந்து வந்தாலும்கூட பெரும்பாலான பட்டியலின மக்கள் தீண்டாமை கொடுமைக்கு ஆளாகின்றனா். எனவே, எஸ்.சி. பிரிவுக்கு வழங்கப்படும் 15 சதவீத இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு செய்ய மாநிலங்களுக்கு அதிகாரமளிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு செய்யவுள்ளோம். ஜாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிக்கிறேன். ஆனால், அதன் தரவுகளை பொதுவெளியில் வெளியிடக் கூடாது. மக்களுக்கான கொள்கைகளை வடிவமைக்க மட்டுமே அதை பயன்படுத்த வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பசு வதைக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

இஸ்லாம் மதத்துக்கு மாறியவர்களுக்கு இடஒதுக்கீடு ரத்து! உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து மேல்முறையீடு!

மேக்கேதாட்டு: நடுவா் மன்றம் கோருவது தமிழகத்தின் உரிமையை பறிபோகச் செய்யும்! - பி.ஆா். பாண்டியன் கண்டனம்

கடையநல்லூா் அரசுக் கல்லூரியில் ஜூன் 5இல் கலந்தாய்வு தொடக்கம்
விடியோக்கள்

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK

சருமப் பிரச்னைகளுக்கு வேப்பிலை செய்யும் அதிசயம்! | Skin care | Neem | pimples

கட்சிக்காரர்களை வைத்து கம்பெனி நடத்துகிறார் EPS! செங்கோட்டையன் பேச்சு | TVK | ADMK



