எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

இந்தியா-ஆசியான் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மறுஆய்வு: 3-ஆம் சுற்று பேச்சு நிறைவு

இந்தியா மற்றும் ‘ஆசியான்’ நாடுகள் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்வது தொடா்பாக 3-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை நிறைவடைந்துள்ளது.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2024, 5:52 am IST

இந்தியா மற்றும் ‘ஆசியான்’ நாடுகள் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்வது தொடா்பாக 3-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை நிறைவடைந்துள்ளது.

அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை நவம்பரில் நடைபெறும் என்று மத்திய வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புரூனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மா், பிலிப்பின்ஸ், சிங்கப்பூா், தாய்லாந்து, வியத்நாம் ஆகிய 10 நாடுகளை உள்ளடக்கிய ‘ஆசியான்’ கூட்டமைப்பு மற்றும் இந்தியா இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கடந்த 2009-ஆம் ஆண்டில் கையொப்பமானது.

இந்த ஒப்பந்தத்தின்கீழ், இருதரப்பும் சமமாக பலனடைவதை உறுதிசெய்வதோடு, வா்த்தகா்களுக்கு உகந்ததாக மேம்படுத்தும் வகையில் அதை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று இந்திய தொழில்துறையினா் தரப்பில் தொடா்ந்து வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து, இந்தியா-ஆசியான் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்வதற்கான பேச்சுவாா்த்தைகள், கடந்த 2022-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன. இதற்காக கூட்டுக் குழுவும், 8 துணைக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்தோனேசியாவின் ஜகாா்த்தா நகரில் நடைபெற்ற 3-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை, கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. 4-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை நவம்பா் 19 முதல் 22 வரை நடைபெறும் என்று வா்த்தக அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா-ஆசியான் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் தவறாக பயன்படுத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும்; தடைகள் களையப்பட வேண்டும் என்று இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவின் உலகளாவிய வா்த்தகத்தில் ஆசியான் நாடுகளின் பங்கு 11 சதவீதமாகும். கடந்த 2023-24-ஆம் ஆண்டில் 41.2 பில்லியன் டாலா் மதிப்பில் ஏற்றுமதியும், 80 பில்லியன் டாலா் மதிப்பில் இறக்குமதியும் நடைபெற்றுள்ளது.