மக்கள் தொகை கணக்கெடுப்பு: தமிழகத்தில் ஆக.1 - 30 வரை வீடுகள் கணக்கீடு : இணையத்தில் இன்றுமுதல் மக்கள் சுயமாக விவரம் பதிவிடலாம்கரூா், ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று வெப்ப அலை மழைக்கால கூட்டத் தொடா்: இன்று பாஜக கூட்டணி கூட்டம் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: இன்று தொடங்கி வைக்கிறாா் பிரதமா் - ரயில்வே துறையில் புதிய அத்தியாயம் சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டைவிட டெங்கு பாதிப்பு குறைவு
/

ரியல் எஸ்டேட் நிறுவனம் போல் செயல்படுகிறது பாஜக: அகிலேஷ் குற்றச்சாட்டு!

பாஜக தன்னை "பாரதிய ஜமீன் கட்சி" என்று பெயர் மாற்றிக்கொள்ளவும்.

News image

அகிலேஷ் யாதவ்

Updated On :8 ஆகஸ்ட் 2024, 11:52 am IST

பாஜக ரியல் எஸ்டேட் நிறுவனம் போல் செயல்படுவதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவரின் எக்ஸ் பதிவில்,

பாஜ உறுப்பினர்களின் நலனுக்காக நிலத்தை விற்கத் திருத்த மசோதா ஒரு சாக்குப்போக்கு என்றும் பாஜக ரியல் எஸ்டேட் நிறுவனம் போல் செயல்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

பாஜக தன்னை "பாரதிய ஜமீன் கட்சி" என்று பெயர் மாற்றிக்கொள்ளவும்.

வக்ஃப் சட்டம் 1995இன் விதிகளைத் திருத்த முற்படும் மசோதா வெறும் ஒரு சாக்கு தான். பாதுகாப்பு, ரயில்வே, நிலங்களை விற்பதே பாஜகவின் ஒரே இலக்கு என்று அவர் இந்தியில் பதிவிட்டுள்ளார்.

“பாஜக உறுப்பினர்களின் நலனுக்காக வெளியிடப்பட்டது” என்று பாஜக ஏன் வெளிப்படையாக எழுதவில்லை. வஃக்பு வாரிய நிலங்கள் விற்கப்படமாட்டாது என எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

முஸ்லீம்களின் உரிமைகளை பாஜக பறிக்க முயற்சிக்கின்றது. வக்ஃபு மசோதாவை சமாஜ்வாதி கட்சி எதிர்க்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்துக்களையும் முஸ்லீம்களையும் பிளவுபடுத்துவதும், அரசியல் சாசனத்தில் முஸ்லீம் சகோதரர்களின் உரிமைகளை எப்படிப் பறிப்பது என்று யோசிப்பதே பாஜகவின் நோக்கம்.

வக்ஃப் வாரியங்களை நிர்வகிக்கும் சட்டத்தைத் திருத்த முற்படும் இந்த மசோதா, தற்போதைய சட்டத்தில் பெரியளவிலான மாற்றங்களை முன்மொழிந்துள்ளது, இதில் முஸ்லீம் பெண்கள் மற்றும் முஸ்லீம் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துகிறது என்று அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.