காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

4 வங்கதேசத்தினர் இந்தியாவுக்குள் நுழைய முயற்சி: அசாம் முதல்வர்

4 வங்கதேசத்தினர் இந்தியாவுக்குள் நுழைய முயன்றதாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ தெரிவித்துள்ளார்.

News image

அசாம் முதல்வர்.

Updated On :12 ஆகஸ்ட் 2024, 12:28 pm IST

4 வங்கதேசத்தினர் இந்தியாவுக்குள் நுழைய முயன்றதாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் வன்முறைக்குப் பின் நிலவி வரும் அரசியல் மாற்றத்துக்கு மத்தியில், மத சிறுபான்மையினா் கடுமையாக துன்புறுத்தப்படுவதாக உள்ளூா் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. இதனால், பதற்றமடைந்த வங்கதேச சிறுபான்மையினா் இந்தியாவுக்குள் தஞ்சம் புக முயல்கின்றனா்.

இதன் காரணமாக இந்தியாவின் எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இந்தியா-வங்கதேச எல்லையில் உள்ள கரீம்கஞ்ச் செக்டார் வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 4 வங்கதேசத்தினர் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டதாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவல், "இன்று அதிகாலை 1:30 மணியளவில், மோதியுர் ஷேக், முஷியர் முல்லா, தானியா முல்லா மற்றும் ரீட்டா முல்லா என அடையாளம் காணப்பட்ட வங்கதேச குடிமக்கள் இந்தியா-வங்காளதேச எல்லையில் உள்ள கரீம்கஞ்ச் செக்டார் வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயன்றனர்.

உடனடியாக திறம்பட செயல்பட்ட போலீஸார், அவர்களை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தினர். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.