தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

முதல்வர் பதவிக்காக காங்கிரஸ் காலில் விழும் உத்தவ்: மத்திய அமைச்சர்!

தந்தை பாலாசாகேப் தாக்கரேவின் குணங்களில் ஒரு சதவீதம் கூட இல்லை..

News image

மத்திய அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ்

Updated On :12 ஆகஸ்ட் 2024, 7:30 am

மகாராஷ்டிரம் தேர்தலுக்கு முன்னதாக முதல்வர் பதவியை எதிர்பார்த்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அற்பமாக தலை வணங்குவதாக மத்திய அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் சாடியுள்ளார்.

இதையடுத்து அவர் மேலும் கூறியதாவது,

மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இந்தாண்டு அக்டோபரில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் கடந்த வாரம் மாநில முன்னாள் முதல்வர் தாக்கரே தில்லி சென்று காங்கிரஸ் உயர்மட்டத் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.

இதையடுத்து, பாஜக தலைவர்கள் சிலர் தாக்கரே எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாதியின் முதல்வர் வேட்பாளராக இருப்பதை உறுதி செய்ய விரும்புவதாகக் கூறினார்.

முதல்வர் பதவிக்காக அற்ப மனிதர்களின் காலில் விழுகிறார் என உத்தவ் தாக்கரேவை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் கடுமையாக சாடியுள்ளார்.

முற்றிலும் மதச்சார்பற்றவராக மாறிவிட்டார் உத்தவ் தாக்கரே, அவரது தந்தை பாலாசாகேப் தாக்கரேவின் குணங்களில் ஒரு சதவீதம் கூட அவரிடம் இல்லை.

அமைதியின்மையை எதிர்கொண்டுள்ள வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்களை உத்தவ் தாக்கரே கண்டிக்கவில்லை என்றும் ஜாதவ் விமர்சித்தார்.

உத்தவ் தாக்கரே எங்களைத் துரோகிகள் என்று அழைக்கும் அதே நேரத்தில் சிவசேனாவின் சித்தாந்தத்தை அவர் கைவிட்டார் என்று அவர் கூறினார்.

ஜூன் 2022இல் சிவசேனா தலைமைக்கு எதிராக ஷிண்டே தலைமையிலான கிளர்ச்சிக்குப் பிறகு, கட்சி பிளவுபட்டு, உத்தவ் தாக்கரே தலைமையிலான அப்போதைய மகாவிகாஸ் அரசின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.