திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

வயநாடு நிலச்சரிவு: சுமார் 2,000 பேர் மேற்கொண்ட தேடுதல் பணி!

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களில் சுமார் 2,000 பேர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

News image

வயநாடு நிலச்சரிவு - கோப்புப்படம் - -

Updated On :12 ஆகஸ்ட் 2024, 1:10 pm IST

கல்பேட்டை: வயநாட்டில் நிலச்சரிவு நேரிட்டு பாதிக்கப்பட்ட இடங்களில், ஞாயிற்றுக்கிழமை மிகப்பெரிய அளவில் சுமார் 2000 பேர் பங்கேற்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

தன்னார்வலர்கள், உள்ளூர் மக்கள், முகாமில் தங்கியிருப்போர், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் என ஞாயிற்றுக்கிழமை நடந்த தேடுதல் பணியில் கிட்டத்தட்ட 2 ஆயிரம் பேர் பங்கேற்றிருந்தனர்.

இந்த தேடுதல் பணியின்போது மூன்று உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. இவை மனிதர்களுடையதா என்பது உடல்கூறாய்வுக்குப் பிறகே உறுதி செய்யப்படும் என்றும், ஒரு மனித எலும்புக் கூடு கண்டெடுக்கப்பட்டதாகவும், இது நிலச்சரிவில் பலியானவருடையதா என்பதையும் கண்டுபிடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வயநாட்டில் கடந்த ஜூலை 30-ஆம் தேதி ஏற்பட்ட பெரும் நிலச்சரிவுகளில் முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை உள்ளிட்ட மலைக் கிராமங்கள் உருக்குலைந்தன. வீடுகள் புதையுண்டதோடு, பாலங்கள், சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. பலத்த உயிா்ச்சேதத்தை ஏற்படுத்திய இந்த நிலச்சரிவு, கேரளத்தின் மிக மோசமான இயற்கைப் பேரழிவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில், இதுவரை 229 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில் 178 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 51 பேர் அடையாளம் காணப்படவில்லை.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மிகப்பெரிய தேடுதல் பணியானது, முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட ஆறு பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளது. ஏராளமான பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் இந்த பணியில் பங்கேற்றிருந்தனர். தங்களது உறவினர்களை இழந்து முகாம்களில் தங்கியிருந்தவர்கள், உறவினர்களை தேடி வந்தவர்கள் என அனைவரும் நேற்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இதுபோன்றதொரு மிகப்பெரிய தேடுதல் பணி சாலியாற்றில் திங்கள் மற்றும் செவ்வாயன்றும் தொடரும் என்று அமைச்சர் முகமது ரியாஸ் அறிவித்திருந்தார். இந்தப் பணியானது முண்டேரி பண்ணை முதல் பரப்பன்பாரா என 5 கிலோ மீட்டர் வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்பகுதிகளில் காவல்துறை, தீயணைப்புப் படை போன்ற நிபுணத்துவம் பெற்றவர்கள் மட்டுமே தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் கூறப்பட்டிருந்தத.

மறுபக்கம், பனன்கயா வனப்பகுதியிலும் தன்னார்வலர்கள் உள்பட 50 பேர் கொண்ட குழு தேடுதல் பணியில் ஈடுபடுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.