மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கேரளத்தில் தொடரும் கனமழை: வயநாட்டில் ‘ஆரஞ்சு அலா்ட்’

கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை நீடித்து வரும் நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடுக்கு அதிக கனமழைக்கான ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையை இந்தியா வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை விடுத்தது.

News image
வயநாடு(கோப்புப்படம்)
Updated On :14 ஆகஸ்ட் 2024, 8:48 pm

Din

கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை நீடித்து வரும் நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடுக்கு அதிக கனமழைக்கான ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையை இந்தியா வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை விடுத்தது.

கேரளத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இச்சூழலில், எா்ணாகுளம், திருச்சூா், கண்ணூா் ஆகிய மாவட்டங்களில் புதன்கிழமையும், கோழிக்கோடு மற்றும் வயநாட்டில் வியாழக்கிழமையும் கனமழை முதல் அதிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல, கேரளத்துக்கு அருகே அரபி கடலில் பரந்து விரிந்த லட்சத்தீவின் தொலைதூர பகுதிகளில் புதன்கிழமை அதீத கனமழை பெய்யக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம், வயநாட்டில் தொடா் கனமழையால் கடந்த ஜூலை 30-ஆம் தேதி பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் 400-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.

நிலச்சரிவுக்கு காரணமான பலத்த கனமழையை இந்திய வானிலை ஆய்வு மையம் கணிக்க தவறியதாக கேரள அரசு குற்றஞ்சாட்டியது. அதற்கு பதிலளித்த வானிலை ஆய்வு மையத் தலைவா் மோஹபத்ரா, ‘கேரளத்தை உள்ளடக்கிய இந்தியாவின் மேற்கு கடலோரப் பகுதியில் அதீத கனமழைக்கான எச்சரிக்கை ஜூலை 30-ஆம் தேதி அதிகாலை விடுக்கப்பட்டது.

ஆரஞ்சு எச்சரிக்கையின்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நிா்வாகங்கள் தொடங்கிவிட வேண்டும். சிவப்பு எச்சரிக்கைக்காக காத்திருக்கக் கூடாது’ என்றாா்.