ரக்‍ஷா பந்தன்: ராகுல், பிரியங்கா பகிர்ந்த புகைப்படங்கள்!

உடைக்க முடியாத பந்தம்.. பிரியங்காவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த ராகுல்..
ராகுலுடன் பிரியங்கா காந்தி
ராகுலுடன் பிரியங்கா காந்தி
Published on
Updated on
1 min read

ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியும் சமூக வலைத்தளத்தில் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளனர்.

வடமாநிலங்களில் மிகவும் பிரபலமாக ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அண்ணன்-தங்கைக்கு இடையிலான பாசப் பிணைப்பை பறைசாற்றும் வகையில் ஆண்டுதோறும் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது.

ராகுலுடன் பிரியங்கா காந்தி
சித்தராமையா பதவி விலகலா? காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு அழைப்பு!

இதுதொடர்பாக ராகுல் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

ரக்‍ஷா பந்தன் திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். அண்ணன்-தங்கைக்கு இடையிலான உடைக்க முடியாத அன்பையும் பாசத்தையும் பறைசாற்றும் ஒரு பண்டிகை.

இது பாதுகாப்புக் கயிறு எப்போதும் உங்கள் புனிதமான உறவை வலுப்படுத்தட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

பிரியங்கா காந்தி வெளியிட்ட புகைப்படம்
பிரியங்கா காந்தி வெளியிட்ட புகைப்படம்

அதேபோன்று பிரியங்கா காந்தி வெளியிட்ட பதிவில்,

ரக்ஷா பந்தன் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகின்றது. இதை நினைவுகூரும் வகையில், அண்ணன்-தங்கை இடையேயான உறவு ஒரு பூச்செடி போன்றது.

அதில் வெவ்வேறு வண்ணங்களின் நினைவுகள், ஒற்றுமையின் கதைகள், மரியாதை, அன்பு மற்றும் பரஸ்பர புரிதல், நட்பை ஆழமாக்குவதற்கான உறுதிப்பாடு அடித்தளத்திலிருந்து செழித்து வளரும் என்று என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com