ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வரி வருவாய் அதிகரிப்பால் கடந்தாண்டைவிட நடப்பாண்டில் மாநில அரசுகளின் பகிர்வில் ரூ. 57000 கோடி அதிகரிப்பு

ஜூலை வரையிலான நிதி செயல்திறன் அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது

News image
Updated On :31 ஆகஸ்ட் 2024, 3:47 am

DIN

நடப்பு நிதியாண்டின் ஜூலை வரையிலான நிதி செயல்திறன் அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டின் ஜூலை மாதம் வரையிலான மாதாந்திர கணக்குகளின் நிதி செயல்திறன் குறித்த அறிக்கையை மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இந்த ஒருங்கிணைந்த நிதி அறிக்கையானது, நாட்டின் நிதிகளை நிர்வகிப்பதிலும், வருவாய் உருவாக்கம், தேவையான செலவினங்களுக்கு இடையில் சமநிலைப்படுத்துவதிலும், மாநில அரசுகளுக்கு வளங்களின் ஓட்டத்தை பராமரிப்பதிலும் அரசின் முயற்சிகளை எடுத்துக்காட்டுவதாய் அமைகிறது.

நிதி அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 2024-25 நிதியாண்டிற்கான பட்ஜெட் மதிப்பீடுகளின்படி, பெறப்பட்ட தொகை 31.9 சதவிகிதமாக உள்ளது. நடப்பாண்டு ஜூலை இறுதிக்குள், பல்வேறான வரி மூலமாகவும், வரி அல்லாத வருவாய் மூலமும் மத்திய அரசு மொத்தம் 10,23,406 கோடி ரூபாயைப் பெற்றுள்ளது.

வரிகளின் மூலம் 7,15,224 கோடி வருவாயும், வரி அல்லாதவை மூலம் 3,01,796 கோடி வருவாயும், 6,386 கோடி கடன் அல்லாத மூலதன வருவாயும் பெறப்பட்டுள்ளன.

வசூலிக்கப்பட்ட வரி வருவாயில் கணிசமான பகுதியை, மாநில அரசுகளுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, மாநில அரசுகளின் பங்காக 3,66,630 கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இந்த பகிர்ந்தளிப்பை, முந்தைய நிதியாண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது, 57,109 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.

மத்திய அரசின் செலவினங்களைப் பொறுத்தவரையில், நடப்பாண்டின் ஜூலை வரையில், மொத்தம் 13,00,351 கோடி ரூபாயை அரசு செலவிட்டுள்ளது. இது, இந்த ஆண்டின் பட்ஜெட் மதிப்பீடுகளில் 27 சதவிகிதமாகும்.

இதில், 10,39,091 கோடி ரூபாய் வருவாய் கணக்கிலும், 2,61,260 கோடி ரூபாய் மூலதன கணக்கிலும் செலவிடப்பட்டுள்ளது.

இதில், அரசின் செலவினங்களில் கணிசமான பகுதியான வருவாய் செலவினங்களில், வட்டி செலுத்துதலுக்காக ஒதுக்கப்பட்ட 3,27,887 கோடி ரூபாயும் அடங்கும்.

அத்தியாவசியத் துறைகளுக்கு ஆதரவளிப்பதற்கும், சமூகத்தில் உள்ள பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு மானியங்கள் மூலம் நிவாரணம் வழங்குவதற்கும், அரசின் முயற்சியை எடுத்துரைக்கும் வகையில், முக்கிய மானியங்களுக்காக 1,25,639 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.