கொல்கத்தா மருத்துவமனையில் பாலியல் கொலை செய்யப்பட்ட முதுநிலை பயிற்சி மருத்துவரின் பெற்றோர், நீதி வேண்டி முகநூல் பக்கத்தில் இன்று (டிச. 5) புதிய கணக்கைத் தொடங்கியுள்ளனர்.
கொல்கத்தாவில் மருத்துவர்கள் தொடர் போராட்டங்களுக்குப் பிறகும் இதுவரை நீதி கிடைக்காததால், பலியான மருத்துவரின் பெற்றோர் சமூகவலைதளப் பக்கத்தை கையில் எடுத்துள்ளனர்.
முகநூல் கணக்கில், உண்மை மற்றும் நீதி: ஆர்ஜி கர் மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவருக்காக குரல் கொடுப்போம் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும், புகைப்படத்தில் ஆர்ஜி கர் விவகாரத்தில் எங்களுக்கு நீதி வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் செயல்பட்டுவரும் ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த இந்த விவகாரத்தில் நீதி வேண்டி பயிற்சி மருத்துவர்கள் உள்பட மருத்துவத் துறையைச் சேர்ந்த பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் 4 மாதங்களாகியும் இந்த விவகாரத்தில் உரிய நீதி கிடைக்காததால், உயிரிழந்த பயிற்சி மருத்துவரின் பெற்றோர் முகநூல் கணக்கைத் தொடங்கி, அதன்மூலம் நீதி கேட்கத் தொடங்கியுள்ளனர்.
இதில் அவர்கள் வெளியிட்டுள்ள முதல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எங்கள் மகளுக்கு நீதி வேண்டும். நாங்கள் நிலையாக நிற்கிறோம்; ஆனால் தனித்து இதனை செய்ய முடியாது. உங்கள் குரல், உங்கள் ஆதரவு மற்றும் உங்கள் அன்பு அனைத்தையும் மாற்றும். ஒன்றுகூடி அநீதிக்கு எதிரான ஒளியாகத் திரள்வோம். நம்பிக்கையையும் பொறுப்புணர்வையும் நாம் ஒன்றிணைந்து பெறுவோம். தயைகூர்ந்து எங்களுடன் துணையாக இருங்கள். பகிருங்கள். பேசுங்கள். ஆதரவளியுங்கள் எனப் பதிவிட்டுள்ளனர்.
மேலும், 4 மாதங்களாகியும் தங்கள் மகளின் மரணத்துக்கு நீதி கிடைக்காததைக் குறிப்பிட்டு விடியோவையும் வெளியிட்டுள்ளனர்.
இதையும் படிக்க | இந்தியாவில் ரூ. 6000 கோடி முதலீடு செய்யும் சீன நிறுவனம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுமி பாலியல் கொலை சம்பவம்: முக்கிய நபா் என்கவுன்ட்டரில் உயிரிழப்பு
மேற்கு வங்கம்: 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! சந்தேகத்தில் ஒருவா் அடித்துக் கொலை!!

50 கத்திக்குத்து காயங்கள், 3 கொலைகள்! குடும்பத்தையே கொன்ற பெண்! அதிரும் காரணம்







